மன்னார் நகர் மத்தியசுற்று வட்ட பகுதியில் உள்ள வடிகான் கால்வாய் எவ்வித பராமரிப்பும் இன்றி உடைந்த நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

மன்னார் மத்திய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அரச பேருந்து சேவை நிலையத்தின் நுழைவு பகுதியில் உள்ள கால்வாயே மேற்படி சேதமாகி காணப்படுகின்றது. பிரதான பாதைகளை ஒன்றினைத்து அதன் ஓரத்தில் தொடுக்கப்பட்டுள்ள குறித்த கால்வாயின் மேல் பகுதியில் உள்ள கொங்கிரீட்டினால் அமைக்கப்பட்ட மூடியானது பாதி உடந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து அம்மூடிக்கு பொருந்தாத முறையில் சாதரணமாக அவ் வாய்காலானது தற்காலிகமாக பல நாட்களாக மூடப்பட்டு காணப்படுகிறது. அதேநேரத்தில் குறித்த கால்வாய் மூடிகளே பாத சாரிகள் கடவையாகவும் காணப்படுகின்ற நிலையில் உரிய தரப்பினர் இதுவரை குறித்த கால்வாயினை சீரமைக்காத அதேநேரத்தில் அவ் கால்வாயினூடகவே அரச பேருந்துகள் பயணிக்கின்றன.

அதே போன்று குறித்த உடைந்த கால்வாய் அருகிலே முச்சரக்கரவண்டி சாரதிகளுக்கான தரிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக குறித்த வடிகானை உரியமுறையில் அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.