கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட பிரேம ரமணன் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சியில் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றி வந்த 32 வயதுடைய பிரேம ரமணன் கடந்த 5ஆம் திகதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி காவல் துறையினர் அழைத்து சென்று விசாரணைக்குட்படுத்திய வேளையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைசெய்யப்பட்ட பிரேம ரமணன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் நண்பராவார். தாம் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்னர் குடும்ப வறுமையினை போக்க தனது மனைவியை நண்பரிடம் பேசி அவரின் நிறுவனத்திற்கு தொழிலுக்காக அனுப்பி வைத்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரேம ரமணன் நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.

அது மட்டுமன்றி அது தொடர்பில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் சந்தேகநபரின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையிலேயே அவர் நாட்டிற்கு திரும்பியவுடன் தனது மனைவியிடம் கூறிவிட்டு பிரேம ரமணனை கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.