Header image alt text

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள நாவலர் முன்பள்ளிக்கு 19,500 பெறுமதியான இரும்பு அலுமாரி ஒன்று வழங்கிவைப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அனுப்பிவைத்த நிதியிலிருந்து இவ்வுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. Read more

கிழக்கு மாகாணத்தில் அனுஸ்டிக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வடக்கிலும் பெரும்பாலான சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தன.

ஐ.நா இலங்கைக்கு கால அவகாசம் வழங்ககூடாது எனவும் சர்வதேச நீதி விசாரணையைக் கோரியும் கிழக்கு மாகாணத்தில் இன்றுஇடம்பெற்ற ஹர்த்தாலுக்கு வடக்கு மாகாணத்திலும் ஆதரவு கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், வடக்கில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அநேகமான சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. Read more

கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அனைத்து பல்கலைகழக மாணவர்கள் அமைப்பினால் குறித்த பேரணி இன்றுபிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக வேட் பிளேஸ் மற்றும் நகர மண்டபம் பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2015 – 2018ம் ஆண்டு பகுதிகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை பதிவிடும் தினம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை 5 மணியுடன் அதற்கான காலம் நிறைவடையவுள்ளது.

தற்போது வரை குறித்த ஆணைக்குழுவிற்கு 950 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதற்கான காலம் கடந்த 14ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதன் காலம் இன்றுவரை நீடிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் காரணமாக, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள், இன்று காலை முதல் ஸ்தம்பித்துள்ளன.

இந்த மாவட்டங்களின் தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்கவில்லை என்பதுடன், அரச அலுவலகங்கள், அரச, தனியார் வங்கிகளும் இயங்கவில்லை. மேலும், வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வவுனியா – ஈச்சங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் அகழ்விற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பூம்புகார் சுடலைக்கு அருகாமையில் புதையல் தோண்டுவதாக வவுனியா சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் நேற்று முன்தினம் இரவு 11.00மணியளவில் ஐவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். Read more