கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அனைத்து பல்கலைகழக மாணவர்கள் அமைப்பினால் குறித்த பேரணி இன்றுபிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக வேட் பிளேஸ் மற்றும் நகர மண்டபம் பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.