2015 – 2018ம் ஆண்டு பகுதிகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை பதிவிடும் தினம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை 5 மணியுடன் அதற்கான காலம் நிறைவடையவுள்ளது.

தற்போது வரை குறித்த ஆணைக்குழுவிற்கு 950 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதற்கான காலம் கடந்த 14ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதன் காலம் இன்றுவரை நீடிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.