Header image alt text

மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து இலங்கை சரியான நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்வது நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை இல்ஙகை மீள புதுப்பித்துக் கொண்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. Read more

இலங்கை இராணுவம் மற்றும் இந்திய இராணுவம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘மித்ர சக்தி’ கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் மாதம் 9ம் திகதிவரை தியதலாவ முகாமில் இடம்பெறும் என இராணுவ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கையில் 120 சிப்பாய்கள் வீதம் கலந்து கொள்ளவுள்ளனர். இதேவேளை இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா கடற்படைக்கு இடையில் முதன்முறையாக இடம்பெறும் பாரியளவிலான கடற்படைப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியா கூட்டு குழு இன்று இலங்கை வந்துள்ளது. Read more

வடமராட்சி பகுதியை சேர்ந்த வயோதிப பெண் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இன்று பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி கிழக்கை சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது 80) எனும் வயோதிப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பில் உறவினர்களால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. Read more

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு விடுதலை கிடையாது என்றும் ஏழுபேர் விடுதலை குறித்துக் கூறப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடுங்கள் என்றும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். Read more

யாழ்ப்பாணம் துண்டிச் சந்தியில் நேற்று பிற்பகல் 1மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நல்லூர் யமுனா ஏரியைச் சேர்ந்த 79 வயதான சேது அன்ரனி என்பவரே உயிரிழந்தார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டதில் விபத்து ஏற்பட்டது. 49 சிசி மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் சம்பவத்தில் படுகாயமைடந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டநிலையில் உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கைதுசெய்யப்பட்டார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

யாழ். அல்லைப்பிட்டி ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர், மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த 21 வயதான நிதர்ஷன் என்பவரே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இளம் குடும்பத்தலைவர், டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போது உயிரிழந்தார் எனவும் ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.