இலங்கையிலிருந்து தப்பிச்சென்று, வெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளைத் தேடிக் கைதுசெய்யும் தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, கைமாற்றல் சட்டத்தின் கீழ், ஆறு நாடுகளில், இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரிகள் 50 பேர், தற்போது, இந்தியா, டுபாய், இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில் மறைந்திருப்பதாக, இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது.