ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, யாழ்ப்பாணத்துக்கு இன்றும் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, நல்லூர்க் கந்தன் கோவிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, யாழ்., தட்டாதெருச் சந்திக்கு அருகாமையிலுள்ள லக்சுமி பிளாசா மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மறுசீரமைப்பு செயற்றிட்ட மற்றும் அண்மையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீசுதந்திர தமிழர் ஒன்றியத்தின் மறுசீரமைப்பு செயற்றிட்ட மாநாட்டிலும் கலந்துகொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.