Header image alt text

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா தவசிகுளத்தில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத் (ஓஹான்)திற்கு இன்று (26.03.2018) ரூபாய் 20,000/- நிதியினூடாக விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. வி.ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்திற்கென வழங்கிய நிதியிலிருந்து நான்காம் கட்ட உதவியாக இது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் உப தலைவர்களுள் ஒருவரும், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் செயற்குழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் நந்தகுமார், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.   Read more

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தரம் 8ல் கல்வி பயிலும் மாணவியான குமஸ்தகரன் சதுர்த்திகா என்ற மாணவிக்கு அவரது கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இன்று (26.03.2019) துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. வி.ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அனுப்பிவைத்த நிதியிலிருந்து மூன்றாம் கட்ட உதவியாக இது வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுணதீவு பிரதேசசபை உபதலைவரும், கழகத்தின் மத்தியகுழு உறுப்பினருமான பொ.செல்லத்துரை(கேசவன்) அவர்கள் கட்சியின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தில் வைத்து மேற்படி துவிச்சக்கரவண்டியை கையளித்தார். நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ந.ராகவன், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கிருபா மாஸ்டர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு கொண்டுவருவது தேசவிரோத செயற்பாடு என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான அவசியமோ, அவகாசமோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்று நாடு திரும்பிய நிலையில், கொழும்பில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் வழங்கிய தீர்ப்பு இலங்கையின் நீதித்துறை தொடர்பாக சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. Read more