அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம், இன்றுடன் 2வது நாளாகவும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வைத்திய சேவையை நாடிச் செல்லும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.