அமெரிக்காவின் தெற்கு டெக்ஸாஸ் எல்லை ஊடாக இலங்கை ஏதிலிகள் சிலர் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமெரிக்க நாடொன்றில் இருந்து அவர்கள் ஏனைய நாடுகளின் ஏதிலிகளுடன் இணைந்து எல்லைத்தாண்ட முற்பட்டுள்ளனர். கைதானவர்கள் டெக்ஸாஸ் எல்லைப் பாதுகாப்பு சபை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.