Header image alt text

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோகசபை கூறியுள்ளது. நாளை காலை 09.00 மணிமுதல் நாளை மறுநாள் காலை 09.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

மின்சார சபையின் திடீர் மின்வெட்டு மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காக இவ்வாறு காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. Read more

2018ம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், 1,315 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும், அவற்றுள் 738 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுப்பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

நாட்டின் பல பகுதிகளின் இன்னும் வறட்சியான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, வடமேல், வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், ஊவா உள்ளிட்ட பல மாகாணங்கள் இந்த வறட்சியான வானிலையை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. Read more

சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இது தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட இருப்பதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக 1068 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 110 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 2 ஆம் நிலை ஆண் ஜெயிலர் பதவிக்கும் பெண் ஜெயிலர் பதவிக்காக 10 பேரும் புனர்வாழ்வு ஆண் அதிகாரிகளாக 15 பேரும் பெண் புனர்வாழ்வு அதிகாரிகளாக மூவரும் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். Read more