2018ம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், 1,315 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும், அவற்றுள் 738 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுப்பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.