யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர்மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியை சேர்ந்த பொன்னையா பாலரஜித் (வயது37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.