சட்டவிரோதமாக கனடா செல்வதற்கு முற்பட்ட 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.