யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபராகப் புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீதமிந்த, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, நேற்று ஆளுநரின் செயலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது வன்செயல்கள் அதிகரித்து காணப்படும் பிரதேசங்களிலுள்ள பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, அப்பகுதிகளில் அதிக பொலிஸ் கண்காணிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு, ஆளுநர் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.