இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் நேற்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது, ஐக்கிய நாடுகளின் உரிமைகள் பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இரா.சம்பந்தன் தெளிவுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.