இந்தியாவிலிருந்து இராணுவ கப்பலொன்று இரண்டு நாள்களுக்கான நட்புறவுக்கான சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்டு, திருகோணமலை துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலிலிருந்து 61 இராணுவவீரர்கள் வருகைதந்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக இன்று வரவேற்றுள்ளனர்