இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சஞ்ஜய் மித்ரா நேற்று கொழும்பில் இடம்பெற்ற இந்திய – இலங்கை ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெணாண்டோவின் அழைப்பில் அவர் இலங்கை வந்துள்ளார். இந்தமாநாட்டில் கலந்து கொண்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.