Header image alt text

கடந்த 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை நிறைவடைந்து விட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கு நேற்று (09) கோட்டை நீதவான் நீதிமன்றல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்ப்பில் ஆஜரான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவின் வாக்குமூலத்தில் உள்ள உண்மை, பொய்களை ஆராய்ந்த பின்னர் அதன் அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். Read more

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் ஒப்பமிட்டு, கடந்த மார்ச் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2115ஃ5 ஆம் இலக்க அதி விசேட அரசிதழ் மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலின் படி யாழ். பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தையடுத்து 11ஆவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் அமையவுள்ளது. Read more

நேற்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட இருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே, மேற்கொள்ளப்பட இருந்த ரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்படவிருந்தது. Read more

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இரு இளைஞர்களை நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து சம்பவ தினமான நேற்றுமுன்தினம் மாலை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் ஜயங்கேணி பிரதேசத்தில் வைத்து 1 கைக்குண்டு 4 வாள்கள் உடன் 2 இளைஞர்களை கைது செய்து ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். Read more