திருகோணமலை துறைமுக காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கழுத்தறுக்கப்பட்டு இளைஞரொருவர் இன்றுகாலை கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை நீதிமன்ற வீதி,வில்லூன்றி பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை தனுஸ்டன் என காவற்துறை தெரிவித்துள்ளனர்.

காதல் பிரச்சினையால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உந்துருளியில் பின்னால் அமர்ந்து வந்த சந்தேகநபர் உந்துருளியை செலுத்தி வந்த நபரின் கழுத்தை எதிர்பாராதவாறு அறுத்த நிலையில், காயமடைந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். எனினும் காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாக விசாரணைமூலம் தெரியவந்துள்ளது. மரணமான இளைஞனின் சடலம் திருகோணமலை பொதுமருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.