ஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த தனுஷ்ஷன் என்ற 20வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் நேற்று காலை 9.40 மணியளவில் திருகோணமலை டொக்யார்ட் வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட தனுஷ்ஷன் என்ற இளைஞன் நேற்றுக்காலை தமது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அவரது நண்பரான நெவில் வீதியில் வசிக்கும் பானுதீன் டேனியல் என்ற சந்தேக நபர் வீட்டுக்கு தேடித் சென்று வெளியில் சென்று வருவோம் என அழைத்துள்ளார். தனுஷ்ஷன் தனது மோட்டார் சைக்கிளில் காற்று இல்லை என கூற டேனியல் தனது மோட்டார் சைக்கிளில் வருமாறு அழைத்து சென்றுள்ளார். கொலை செய்யப்பட்ட தனுஷ்ஷனே மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்படை தளத்திற்கு முன்னாள் உள்ள டொக்யார்ட் வீதியால் சென்று அவ்விடத்தில் உள்ள முச்சக்கர வண்டி நிறுத்தும் இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தக் தணுஷ்க்ஷனிடம் கோரி அவரின் கழுத்தினை அறுத்துள்ளார். கழுத்து வெட்டப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டி நிறுத்திடுமிடத்தில் உள்ளவர்களிடம் உதவி கோரிய போதும் அங்கு உள்ளவர்கள் யாரும் உதவிட முன்வராத நிலையில் கடற்படை தளத்திற்குள் சென்று உதவி கோரிய நிலையில் அவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தனுஷ்ஷன் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் இக்கொலையை புரிந்த பின்னர் கத்தியுடன் தமது வீட்டிற்கு சென்று தான் செய்ததை தனத பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் குறித்த நபர் தனது பெற்றோருடன் கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் எடுத்துச் சென்று துறைமுக பொலிஸில் சரணடைந்துள்ளார். தன்னுடைய காதலியை தனுஷ்ஷன் என்பரும் காதல் செய்ததாகவும் அதற்காகவே அவரை கொலை செய்ததாக டேனியல் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.