Header image alt text

இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அன்தோனியோ குட்டெரெஸ் அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர நியுயோர்க் விஜயம் செய்துள்ள நிலையில், நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளரை சந்தித்திருந்தார். இதன்போது இலங்கையின் பேண்தகுதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் உறுதியளித்துள்ளார். Read more

அரச நிறுவனங்களுக்கு வருகைதரும் விசேட தேவையுடையவர்கள் தமது சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்துமாறு சில அரச நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விசேட தேவையுடைய கலாநிதி அஜித் பெரேரா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை தீர்ப்பானது, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமால் விசாரிக்கப்பட்டு இன்று எட்டு அரச நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கு சிறுவர் துஷ்பிரேயோகங்கள் தொடர்பில் கடந்த 2017ஆம் ஆண்டு மாத்திரம் 12,093 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென, குறித்த திணைக்களத்தின் 2017ஆம் ஆண்டுக்குரிய செயற்திறன் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 1,187 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்திலிருந்தும் இரண்டாவதாக குருநாகல் மாவட்டத்திலிருந்து 1,084 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more

மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL315 என்ற விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு குறித்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஜகர்த்தாவில் இருந்து வருகை தந்த லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL365 என்ற விமானம் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த ஸ்ரீரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ருடு 365 என்ற விமானங்களும் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் எயார் கொமாண்டர் முஸ்தபா அன்வர், தலைமையிலான பாகிஸ்தானிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழுவினருடனான இச்சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more