அரச நிறுவனங்களுக்கு வருகைதரும் விசேட தேவையுடையவர்கள் தமது சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்துமாறு சில அரச நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விசேட தேவையுடைய கலாநிதி அஜித் பெரேரா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை தீர்ப்பானது, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமால் விசாரிக்கப்பட்டு இன்று எட்டு அரச நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.