இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.என்.எஸ் ‘மில்லிநோகேட் ‘மற்றும் யு.எஸ்.எஸ் ‘இஸ்ப்ருவன்ஸ் ‘ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் வந்தடைந்தன.

வருடாந்தம் இடம்பெறும் கடற்படை பயிற்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் இரண்டையும் இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டன. யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் போர்க்கப்பலானது 2362 தொன் நிறைகொண்டதுடன் 155.3 மீட்டர் நீளம் கொண்டதாகும். அதேபோல் யு.எஸ்.எஸ் இஸ்ப்ருவன்ஸ் கப்பலானது 9580 தொன் நிறை கொண்டதாகும். இவ்விரண்டு போர்க்கப்பல்களும் இலங்கை கடற்படை கப்பல்களுடன் இணைந்து தமது கடற்படை பயிற்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளன.

இரண்டு நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு நட்புறவு வலுவடைந்துள்ள நிலையில் இரு நாடுகளின் கடற்படை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் நோக்கிலும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இந்த கூட்டு கடற்படை பயிற்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.