மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார்.

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகம் காரணமாக குறித்த பஸ் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது. பாதையை விட்டு விலகிய பஸ் ஏ9 வீதியில் அமைந்துள்ள கனகாம்பிகை குளத்திற்குள் குடைசாய்ந்துள்ளது. மிக மோசமானமுறையில் குறித்த பஸ் செலுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.