Header image alt text

அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகள் கடந்த 5 ஆம் விடுமுறை வழங்கப்பட்டதுடன் முஸ்லிம் பாடசாலைகள் கடந்த 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதன்படி முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 17ம் திகதி ஆரம்பமானது. இதேவேளை அனைத்து பாடசாலைகளிலும் புதிய தவணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

வடக்கு, கிழக்கில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில், 4,750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மே மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் ஒரு மில்லியன் ரூபா செலவில் ஒரு வீடு நிர்மாணிக்கப்படுகிறது. Read more