அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்புகொண்டு ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத்தயார் என அமெரிக்கா இதன் போது உறுதியளித்துள்ளார். இலங்கை மக்களுக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்தி நட்புறவை மீள வலியுறுத்தியமை குறித்து இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களுக்கு நட்புறவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு முன்வந்தமையை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்கள் சார்பில் அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். (அரசாங்க தகவல் திணைக்களம்)