அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அனைத்து மதத் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்றையதினம் காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் இன்று மாலையில் அனைத்து மதத் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஆராய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று சர்வக்கட்சி மாநாடு இடம்பெறவுள்ளது. இம் மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.