எதிர்வரும் மாதம் 1ம் திகதி முதல் 39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுபாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, வெளிநாட்டு நபர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர் விசாவினை பெற்றுக்கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்டிருந்த புதிய முறைமை ஊடாக விமான நிலையத்திலேயே விசாவினை பெற்றுக் கொண்டு நாட்டினுள் பிரவேசிக்க வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அதனை மறுஅறிவித்தல் வரை ரத்துச்செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே, வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவதாயின், முற்கூட்டியே விசா அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.