Header image alt text

மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமான பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரின் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள கட்டிடத்தில் நகைத் தொழில் செய்துவரும் நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த க.அருட்செல்வம் (44 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

கொழும்பு, கொம்பனிவீதி பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 46 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் நடத்திய விஷேட தேடுதலின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிவாசல் மதகுருவின் கட்டிலின் கீழ் இருந்தே, குறித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. Read more

அளுத்கம – தர்காநகர் பகுதியில் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடைய இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தேகநபர்களின் நிழற்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தேடப்படுபவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தொடர்பில் அறியக்கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more