ஒரு தொகை வெடிபொருட்களை எடுத்துச் சென்றுகொண்டிருந்த மூன்று பேரை வெள்ளவத்தைப் பிரதேசத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியில் ஒரு கிலோ கிராம் C-4 என்ற வெடிபொருட்களை எடுத்துச் செல்லும்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.