கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் முப்படையினரும் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தில் நாட்டின் பல பிரதேசங்களில் பலர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 44 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினராலும் 15 பேர் பயங்கரவாத விசாரணை பிரிவினராலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.