கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்த 8 தற்கொலைக் குண்டுதாரிகளும் 18 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பில், புலனாய்வு பிரிவினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் 6 வான்கள், 9 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள், கெப் ரக வாகனம் ஒன்று என்பன குறித்த தற்கொலைத்தாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. குறித்த 18 வாகனங்களில் 6 வாகனங்கள் மாத்திரமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய மொஹமட் முபாரக் மொஹமட் அஸாமின் பெயரில் 3 மோட்டார் சைக்கிள்களும் வானொன்றும் கெப் ரக வாகனமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.