Header image alt text

அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிட நிழற்குடை திறப்பு விழா மற்றும் மாணவர், ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (16.04.2019) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3..30மணியளவில் கிளிநொச்சி விவேகானந்தநகர் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

விவேகானந்தநகர் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு. க.ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண விவசாய, கால்நடை, நீர்ப்பாசன, மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவநேசன் (பொருளாளர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்), ஐயம்பிள்ளை ஜசோதரன் (நிர்வாக செயலாளர் -FEED), க.தவராஜா (தவிசாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை, செயற்குழு உறுப்பினர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்), வே.சிவபாலசுப்பிரமணியம் (செயற்குழு உறுப்பினர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) ஆகியோரும், Read more

பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வேனில் 12 பேர் இருந்துள்ளதுடன் அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

முல்லைத்தீவு, வற்றாப்பளை சந்தியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து நெடுங்கேணி நோக்கி பயணித்த கென்டேனர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இராணுவ சோதனைச்சாவடியை உடைத்துச் சென்றதால் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இராணுவத்தின் 6ஆவது படைப்பிரிவில் கடமையாற்றும் எச்.பி.எஸ் பத்திரண என்பவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். Read more

ஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த தனுஷ்ஷன் என்ற 20வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் நேற்று காலை 9.40 மணியளவில் திருகோணமலை டொக்யார்ட் வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட தனுஷ்ஷன் என்ற இளைஞன் நேற்றுக்காலை தமது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அவரது நண்பரான நெவில் வீதியில் வசிக்கும் பானுதீன் டேனியல் என்ற சந்தேக நபர் வீட்டுக்கு தேடித் சென்று வெளியில் சென்று வருவோம் என அழைத்துள்ளார். Read more

இலங்கையுடனான பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், டொனியர் ரக கண்காணிப்பு விமானமொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகிறதென, இந்தியாவின் டைமஸ் நியு செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் மாத்திரமின்றி தென் ஆசியாவின்  அனைத்து நாடுகளுடனும் தமது பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்த இந்தியா எதிர்பார்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read more

துருக்கி ஊடாக ஐரோப்பியவுக்குள் நுழைய முயன்ற இலங்கையர் உள்ளிட்ட சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் 558 பேர் துருக்கி பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்று, அந்நாட்டு செய்தி நிறுவனமான எனடொலு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையர் ஒருவரைத் தவிர பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், மொரோக்கோ, டியுனீசியா, ஈரான், ஈராக், பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை லண்டன் – லுடன் விமான நிலையயத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் நால்வரும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பகல் 2.30 மணியளவில் கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினாலேயே குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த இரு பெண்களும், ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த புகையிலை தோட்டத்தில் நால்வர் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒருவர் உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். Read more

நாட்டின் மின்சார பிரச்சினைக்கு தீர்வை காணும்வகையில் ஐந்து எல்.என்.ஜீ மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த மின்சார தேவையில் 50 சதவீதமான பகுதியை 2030ம் ஆண்டளவில் புதுபிக்கக் கூடிய வலுசக்தி மூலங்களிருந்து பெற்றுக்கொள்ள அமைச்சு எதிர்பார்த்துள்ளது. இதற்கமைய சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி மிதக்கும் மின் உற்பத்தி நிலையம் மாதுருஓய நீர்த்தேக்கத்தில் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் பத்து மெகாவோட்ஸ் மின்சாரம் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது. Read more

திருகோணமலை துறைமுக காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கழுத்தறுக்கப்பட்டு இளைஞரொருவர் இன்றுகாலை கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை நீதிமன்ற வீதி,வில்லூன்றி பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை தனுஸ்டன் என காவற்துறை தெரிவித்துள்ளனர்.

காதல் பிரச்சினையால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உந்துருளியில் பின்னால் அமர்ந்து வந்த சந்தேகநபர் உந்துருளியை செலுத்தி வந்த நபரின் கழுத்தை எதிர்பாராதவாறு அறுத்த நிலையில், காயமடைந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். Read more

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த கிழக்கு பல்கலைகழக மாணவிக்கு கல்வி ஊக்குவிப்பு உதவியாக 25000/- வழங்கப்பட்டது.

கட்சியின் சுவிஸ் உறுப்பினர் திரு.தவராஜா (தேவன்) அவர்களால் வழங்கப்பட்ட மேற்படி நிதியை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் உப தலைவர்களுள் ஒருவரும், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் மாணவியிடம் கையளித்தார். Read more