வடக்கு, கிழக்கில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில், 4,750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மே மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் ஒரு மில்லியன் ரூபா செலவில் ஒரு வீடு நிர்மாணிக்கப்படுகிறது. Read more
முல்லைத்தீவு விஷ்வமடு பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு, அவரின் 15 வயதுடைய சகோதரி இந்த மின்னல் தாக்கத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வளர்ப்பு நாயால் அயலர்வர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடால் ஏற்பட்ட கைகலப்பில் 3 பெண்கள் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவவுக்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இச்சம்பவத்தில், இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.என்.எஸ் ‘மில்லிநோகேட் ‘மற்றும் யு.எஸ்.எஸ் ‘இஸ்ப்ருவன்ஸ் ‘ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் வந்தடைந்தன.
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார்.
இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அன்தோனியோ குட்டெரெஸ் அறிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களுக்கு வருகைதரும் விசேட தேவையுடையவர்கள் தமது சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்துமாறு சில அரச நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கு சிறுவர் துஷ்பிரேயோகங்கள் தொடர்பில் கடந்த 2017ஆம் ஆண்டு மாத்திரம் 12,093 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென, குறித்த திணைக்களத்தின் 2017ஆம் ஆண்டுக்குரிய செயற்திறன் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL315 என்ற விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.