இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத தற்கொலைதாரிகள் 9 பேரின் முழுமையான விபரங்களும் வெளியாக்கப்பட்டுள்ளன. அவர்கள் வசித்த இடம், அவர்களின் உறவினர்கள் மற்றும் சொத்துக்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த தற்கொலை தாரிகளின் அனைத்து சொத்துக்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தடை விதிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
1. கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் அலாவுதீன் அஹமட் முனாஃப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் 121/3 சென்றல் வீதி மட்டக்குளியில் வசித்து வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more