Header image alt text

இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாராகவிருந்த முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் மன்னார்- விடத்தல்தீவு, அடம்பன் ஆகிய பிரதேசங்களில் வைத்து பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் மீனவர்களின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்டவர்கள் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர், விடத்தல் தீவு, அடம்பன் பகுதிகளுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ். தென்மராட்சி பாலாவிப் பகுதியில் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலாவிப் பகுதியில் இருதரப்பிலும் முப்பது பேர் அடங்கிய குழு வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவத்தில் பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் கூரிய ஆயுதம் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். Read more