சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொண்ட தொழிலாளர் தினத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 1984 முதல் சுவிஸ் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து புளொட் சுவிஸ் உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் ஊர்வலமானது, முப்பத்தைந்தாவது வருடமாக இம்முறையும் நடைபெற்றது.
இம்முறை இதில் ‘தமிழினத்தின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை இலங்கை அரசு காண வேண்டும், வெறும் பேச்சுவார்த்தையாக இருக்காமல் தீர்வாக இருக்க வேண்டும்.
அமைதியும், பாதுகாப்புமுள்ள சுதந்திரத்தை நாம் விரும்புகின்றோம். Read more