மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகிலுள்ள காட்டு பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த நபர் நேற்று மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து இரண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தகவலையடுத்து அங்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த பொதிகளை மீட்டு சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.