பாடசாலைகளில், தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்போவதில்லை என்றும், அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை, 13ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும், தரம் 6முதல் 13வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும், பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு, உயரிய மட்டத்தில் வழங்கப்படும் என்றும், அரசாங்கம் அறிவித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.