மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பகுதிக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லவிருந்தவர்கள் பொலிஸாரினால் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்றுகாலை சவுக்கடி பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டத்தினை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது சிலாபம் பகுதியைச் சேர்ந்த இருவரும், வந்தாறுமூலையைச் சேர்ந்த ஒருவருமாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய 13பேர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சவுக்கடி பகுதியில் இருந்து படகு மூலம் வேறு ஒரு படகுக்கு ஆட்களை அனுப்பிக்கொண்டிருக்கும்போது குறித்த செயற்பாடுகள் மீனவர்களினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த மூவரும் பயணப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களை ஏற்றிவந்ததாக கருதப்படும் முச்சக்கர வண்டியொன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.