சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 6மணிவரை இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இனங்களுக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவொன்றை பதிவிட்டமை தொடர்பில் பிரதேசவாசிகள் தமது எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பதிவை பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.