நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்றுமாலை தெரிவித்திருந்தார். நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்தவே மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.