நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக் காரணமாக நேற்று நாடு முழுவதுமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை வடமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருந்தபோதும், மாணவர்களின் பாதுகாப்பு நிமித்தம் வடமேல் மாகாண பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.