Header image alt text

இந்தியாவின், மத்திய அரசாங்கம் விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடித்துள்ளது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுக்க தடை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பிரிவு, வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் குளியாப்பிட்டிய, பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தபட்ட பொலிஸ் ஊரடங்கு, பின்னர் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையையடுத்து வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம் என ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், பின்னர் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு நேற்று இரவு 9 மணியிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்தனர். Read more

கொச்சிக்கடை, சென். அந்தோனி தேவாலயத்திற்கு தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள வந்த நபர் கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட நபரிற்கு சொந்தமான வேன் ஒன்றிலேயே வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வேன் கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட மொஹம் அசாம் மொஹமட் முபாரக்கின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வேன் வெடிபொருள் பொருத்தப்பட்ட நிலையில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. Read more

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி நேற்று இராணுவ தளபதியை இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை இராணுவ அதிகாரிகளுக்காக அவுஸ்திரேலியாவில் வழங்கப்படக்கூடிய பயிற்சிகள் மற்றும் பங்களிப்புகள் தொடர்பான சாத்தியக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. Read more

அரச பாடசாலைகளின் கனிஷ்ட மாணவர்களுக்கான 2ம் தவணை இன்று ஆரம்பித்த போதிலும், மாணவர்களின் வருகை குறைந்த அளவிலேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து, பாடசாலைகளின் செயற்பாடுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தரம் 6 முதல் தரம் 13ம் வரையான மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. எனினும் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த முறையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more