ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை பிரதேசத்தில் வைத்து வெடிக்கவைக்கப்பட்ட குண்டு பொருத்தப்பட்டிருந்த வாகனத்தை, கொள்வனவு செய்ய உதவியமை மற்றும் அதன் ஆசனங்களை அமைக்க உதவிய நபரே காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து, பொலிஸாரல் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அடிப்படைவாதிகளுடன் தொடர்புகளை பேணும் நோக்கில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஒரு சிலர் இந்தியாவிற்கு சென்றிருக்கலாம் என இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இந்திய டுடே பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.