வவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் நேற்று இரவு மர்மப் பொதியொன்று காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல் காணப்பட்டது.

சாளம்பைக்குளம் பள்ளிவாசலை அண்மித்துள்ள பாலத்தின் அருகே கைவிடப்பட்ட நிலையில் மர்மப் பொதி ஒன்று காணப்படுவதாக நேற்று இரவு பூவரசங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இந்நிலையில், இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த மர்ம பொதியினை சோதனையிட்டுள்ளனர்.இதனால் அப்பகுதி வீதிகளும் முடக்கப்பட்டு இராணுவத்தினரால் கடும் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதனால் சாளம்பைக்குளம் பகுதியில் பதற்ற நிலை ஏற்ப்பட்டிருந்தது. சோதனைக்குட்படுத்தப்பட்ட மர்மப் பொதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலிருந்து நான்கு கூரிய வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.