யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) அவர்கள் நேற்று 17.05.2019 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னார் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், வெங்கலச் செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினருமான தோழர் சுப்பையா ஜெகதீஸ்வரன்(சிவம்) அவர்களின் அன்புச் சகோதரனாவார் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் பெரியதம்பனை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (19.05.2019) காலை 10மணியளவில் கற்குளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக் கிரியைகள் நடைபெறவுள்ளன.
தொடர்புகட்கு: 0771770801 (சிவம்)