நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமையின் காரணமாக, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்தாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இலங்கை அதிபர் சங்கம் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட துன்பகரமான சம்பவங்களையடுத்து, மாணவர்கள் மனநல நீதியில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுடன், மாணவர்கள் வழக்கமான அட்டவணைக்கு ஏற்றவாறு செயற்பட சிறிது காலம் தேவைப்படுவதாக, இலங்கை அதிபர் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.